Header image alt text

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக  1700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட  ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் இடம்பெற்றது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக முற்பகல் 11 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் A.P.சக்திவேல் உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். Read more

இலங்கை நிதித்துறையின் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவளிப்பதாக உலக வங்கி குழுமத்தின் தனியார் துறை பிரிவான சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய துணை தலைவர் Riccardo Puliti உறுதியளித்துள்ளார். இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம்/உலக வங்கியின் வசந்த கால கூட்டத்தின் போது, ​​இராஜாங்க நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோரை சந்தித்த போதே Riccardo Puliti இதனை தெரிவித்துள்ளார். Read more

உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய உப தலைவர் மார்ட்டின் ரைஸருக்கும் (Martin Raiser) நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பொருளாதார மீட்சி மற்றும் நிதித்துறையின் ஸ்திரத்தன்மை போன்றவற்றில் இலங்கை அடைந்து வரும் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியடைவதாக மார்ட்டின் ரைஸர் இங்கு கூறியுள்ளார். Read more

ஐக்கிய நாடுகளின் மூலதன நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக கலாநிதி பிரதீப் குருகுலசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் பொருளாதார நிபுணர் பிரதீப் குருகுலசூரிய அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவராவார். ஐக்கிய நாடுகளின் மூலதன நிதியத்தில் இணைவதற்கு முன்னர் பிரதீப் குருகுலசூரிய, சுற்றுச்சூழல் நிதிக்கான ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு நிதியத்தின் நிர்வாக ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியிருந்தார். அங்கு அவர் 140 நாடுகளில் இயற்கைஇ காலநிலை மற்றும் எரிசக்தி நிதியை மேற்பார்வையிட்டார். Read more

18.04.2016ல் மரணித்த மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் தோழர் சிங்கம் (பெனடிக்ட் தனபாலசிங்கம்) அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று….
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வதிவிடமாகவும் கொண்ட பெனடிக்ட் தனபாலசிங்கம் (சிங்கம்) அவர்கள் தனது இளம் பராயத்திலேயே சமூக சேவைகளில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். தனது ஆரம்ப அரசியல் பணிகளை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செ.இராஜதுரை அவர்களுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் முன்னெடுத்திருந்தார்.

Read more

Dialog  மற்றும் Airtel நிறுவனங்கள் இன்று தமது செயற்பாடுகளை ஒன்றிணைத்தன. Dialog Axiata PLC, Axiata Group Berhad),  Bharti Airtel Limited நிறுவனங்கள், ஒன்றிணைந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. இதற்கமைய, Dialog நிறுவனம், Airtel Lanka நிறுவனத்தினை இணைத்துக்கொண்டுள்ளதுடன், Bharti Airtel நிறுவனத்திற்கு Dialog  நிறுவனத்தின் பங்குகள் வழங்கப்படவுள்ளன. இந்த ஒன்றிணைந்த உடன்படிக்கைக்கு, பங்குதாரர்கள் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

மியன்மாரில் மியாவாடி இணையக் குற்றப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 08 இலங்கையர்களும் நாட்டை வந்தடைந்துள்ளனர். தாய்லாந்தில் இருந்து இன்று (18) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த UL 403 என்ற விமானத்தில் இவர்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்களில் 06 ஆண்களும் 02 பெண்களும் உள்ளடங்குகின்றனர். கடந்த மார்ச் மாதம் 4ஆம் திகதி மியன்மாரில் மியாவாடி இணையக் குற்றப்பகுதியில், பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 08 இலங்கையர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மியன்மார் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டிருந்தனர். Read more

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக மைத்திரிபால சிறிசேன செயற்படுவதை தடுக்கும் வகையில் விதிக்கப்பட்ட  தடையுத்தரவு எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் பதவியை வகிப்பதற்கு தகுதியற்றவர் என்பதால் அவரை அந்த பதவியில் இருந்து நீக்குவதற்கான நிரந்தர தடையுத்தரவை கோரி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். Read more

வவுனியா கோவில்குளம் சங்கரப்பிள்ளை வீதி அந்த பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க வவுனியா நகரசபை முன்னாள் உறுப்பினர் சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று வவுனியா நகரசபை செயலாளர் அவர்களின் பாரிய முயட்சியாலும் துரித நடவடிக்கையில் இவ் வீதி புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று தார் ஊற்றி செப்பனிடப்பட்டது.

Read more

துயர் பகிர்வு

Posted by plotenewseditor on 17 April 2024
Posted in செய்திகள் 

அமரர் திருமதி பரமலிங்கம் மனோன்மணி அவர்கள்
மலர்வு : 16.05.1943
உதிர்வு: 17.04.2024
கழகத்தின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் மத்தியகுழு உறுப்பினர் தோழர் சங்கரி (ப. ரவிச்சந்திரன்) அவர்களின் தாயார் பரமலிங்கம் மனோன்மணி அவர்கள் இன்றுகாலை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

Read more