இந்திய முன்னாள் ஜனாதிபதி அணுவிஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆற்றிய உரை
நேற்று இரவு குடாநாடு அல்லோலகல்லோலம்; மர்ம நபர்களால் எங்கும் பீதி
சந்தேகத்துக்கிடமானவர்களின் நடமாட்டம் நேற்று இரவு கட்டுக்கடங்காமல் அதிகரித்தமையால் பெரும் அல்லோலகல்லோலப்பட்டது குடாநாடு. மக்கள் நித்திரையின்றிப் பீதியில் உறைந்தனர்.யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் நேற்று இரவு சந்தேகத்துக்கிடமானவர்களின் நடமாட்டங்கள் அதிகமாகக் காணப்பட்டமையால் மக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் விடியும் வரை நித்திரை இன்றி விழித்திருந்தனர் என எமது பிரதேச செய்தியாளர்கள் உறுதிப்படுத்தினார்கள்.
கோண்டாவில் பகுதியில் பிடிபட்ட மர்மமனிதனுக்கு 14 நாள்கள் விளக்கமறியல்
யாழ்ப்பாணம், கோண்டாவில் பிரதேசத்தில் வைத்து நேற்று மாலை பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் கையளிக்கப்பட்ட மர்ம நபர் கோப்பாய் பொலிஸாரால் இன்று யாழ். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தபட்டார்.
குறித்த சந்தேக நபர் ரி.டி.தனஞ்சே (வயது 20) கைது செய்யப்பட்ட மேற்படி நபர் தீவிர பொலிஸ் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இவரை விசாரணை செய்த நீதிமன்ற நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்ததுடன் மனநோயாளியாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதனால் வைத்திய பரிசோதனைக்கும் உட்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.
கோண்டாவில் வடக்கு, தில்லையம்பதி சிவகாமி அம்மன் ஆலயப் பகுதியில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த மேற்படி மர்ம நபரை மடக்கிப் பிடித்த பிரதேசவாசிகள், அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்த நிலையிலேயே பொலிஸார், குறித்த நபர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இது தொடர்பான மீள் விசாரனைகள் எதிர்வரும் 15ம் திகதி நடைபெறவுள்ளது.
கோண்டாவிலில் யன்னல் ஊடாக வீட்டினுள் அவதானித்த சிங்கள் இளைஞர் மீது மக்கள் நையப்படைப்பு
கோண்டாவில் தில்லையம்பதி கிராமத்தில் வீட்டு ஜன்னல் கதவினால் வீட்டின் உட்புறத்தை பார்த்துக் கொண்டிருந்த சிங்கள இளைஞர் ஒருவனை கிராம மக்கள் மடக்கிப் பிடித்து நையப்புடைத்துள்ளனர்.